Sunday, May 13, 2012

நானும் அப்படித்தான்


மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் தனது மாணவர்கள் குழுவொன்றுடன் செயல்முறைப் பாடம் நடத்துவதற்காக வைத்தியசாலைக்குச் சென்றார். அங்குள்ள நோயாளிகள் சிலரின் நோய் விபரங்களை மாணவர்களுக்கு விளக்கி அவர்களது வைத்திய அறிவைச் சோதிப்பதே அவரது நோக்கமாக இருந்த்தது.

ஒரு நோயாளியின் கட்டிலுக்கு அருகே சென்ற அவர் அங்கிருந்த x-ray படத்தை சுட்டிக்காட்டிஇங்கே பாருங்கள், இவனது இடது காலின் எலும்புகள் இரண்டும் முறுக்குண்டு போயுள்ளன. இதனால் தான் இவன் நொண்டியவாறு நடக்கிறான்” என்று விளக்கினார்.

பின்னர் ஒரு மாணவனைப் பார்த்துஇவ்வாறான நிலையில் நீர் என்ன செய்வீர்?” என்று கேட்டார்.

சிறுது நேரம் யோசித்த அம்மாணவன்சேர் நானும் நொண்டியவாறு தான் நடப்பேன் என்றான்

No comments:

Post a Comment